ஆசிரியரிடம் ஒழுக்கமற்ற முறையில் தொந்தரவு கொடுத்த 3 மாணவர்கள் கைது..! - Seithipunal
Seithipunal


வடபழனி அடுத்த திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு 12 ஆம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் அங்கு உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தகாத முறையில் நடப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கிண்டல் செய்வது, பள்ளி ஆசிரியை மற்றும் பள்ளி மாணவிகள் கழிவறை செல்லும்போது கழிவறையில் வெளிப்புறமாக பூட்டிவிட்டு செல்வது போன்ற ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வது என தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இவர்களின் தொந்தரவு பொறுத்துக்கொள்ள முடியாத பட்சத்தில் இந்த மூன்று மாணவர்கள் மீதும், பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் சார்பில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டியின் ஆலோசனைப்படி விசாரணை நடைபெற்று, மாணவர்களின் பெற்றோர் வரவழைத்து இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து,  மாணவர்கள் மூன்று பேரையும் கைது செய்ய கெல்லிஸ் இளைஞர் நீதிமன்றக் குழு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்கள் மீது தலைமையாசிரியரே புகார் அளித்திருந்த நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் மாணவர்கள் கைது செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 students arrested for disturbing teacher


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->