3 மாணவர்கள் சேர்ந்து பள்ளி மாணவனை சரமாரியாக அறிவாள் வெட்டு.... போலீஸ் விசாரணை....
3 students gang up and brutally beat a schoolboy Police investigation
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன்.திருநெல்வேலியிலுள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று பள்ளிக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தான்.
அப்போது அரியநாயகிபுரத்தையடுத்த கெட்டியம்மாள்புரம் பகுதியில்பேருந்து சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து உள்ளே ஏறியுள்ளனர். அந்த கும்பல் பேரூந்திலிருந்த 17 வயது மாணவனை வெளியே இழுந்து தூக்கியெறிந்தனர். மேலும்,அந்த மர்மகும்பல் கையில் வைத்திருந்த அரிவாளால் மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் மாணவனுக்கு தலையில் பல வெட்டுகள் விழுந்தன.இதற்கிடையே பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் போட, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடினர் மேலும் பேருந்தில் வந்த சக பயணிகள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் பாதிக்கப்பட்ட மாணவனிடமும், அவன் படிக்கும் பள்ளியிலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயம்பட்ட மாணவரிடம் முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார் விசாரணை நடத்தினார்.இந்நிலையில், மாணவனை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 17 வயதுடைய 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
3 students gang up and brutally beat a schoolboy Police investigation