போலீசாரின் சோதனையில் சிக்கிய ஹவாலா பணம் - இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இளையான்குடி சாலை காந்தி நகர் பகுதியில், மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தனர். 

அவர்களை வழிமறித்து நிறுத்திய போலீசார் இளைஞர்களிடம் இருந்த வந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் எந்த வித ஆவணமும் இன்றி 52 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. 

அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் மற்றும் கவிதாஸ் என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது: "சென்னையில் இருந்து பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

10 நாட்களுக்கு ஒரு முறை அனுப்பி வைக்கப்படும் பணத்தை உரிய நபர்களிடம் இவர்கள் இருவரும் வழங்கி வந்துள்ளனர். தற்போது பிடிபட்ட பணம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

52 lakhs money seized in ramanathapuram


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->