#செங்கல்பட்டு || தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.!
A child who fell into a water tank died in Chengalpattu district
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்ததில் உள்ள அச்சரப்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியவாணன் என்பவரின் மகன் கவி மித்திரன்(3), நேற்று மாலை வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தான்.
பின்பு குழந்தையைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிய போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை தலை குப்புற விழுந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு அச்சரப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த அச்சரப்பாக்கம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A child who fell into a water tank died in Chengalpattu district