குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர் உயிரிழப்பு ..! உறவினர்கள் கதறல்..!!
A Tamilian Who Injured in Kuwait Fire Accident Died
நேற்று விடிகாலையில் குவைத் நாட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி என்ற கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் மாரியப்பன் (41) என்பவர் குவைத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.
இதையடுத்து மாரியப்பனின் நிறுவனம் அவருக்கு நேற்று தீ விபத்து நடந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் ஒரு அறையை ஒதுக்கி கொடுத்துள்ளது. இந்த குடியிருப்பில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த தீ விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் மாரியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.
குவைத்தில் உள்ள மாரியப்பன் குடும்ப உறவினர் ஒருவர் அங்கிருந்து மாறியப்பனின் வீட்டிற்கு கைபேசி மூலம் மாரியப்பன் உயிரிழந்த தகவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா என்ற 11 வயது மகளும், கதிர் நிலவன் என்ற 7 வயது மகனும் உள்ளனர்.
இதுகுறித்து கூறிய மாரியப்பனின் தாய் வீரம்மாள், " இரண்டு நாட்களுக்கு முப்பு தான் என்னிடம் கைபேசியில் நலம் விசாரித்தார். சிகிச்சையில் உள்ளார் என்று சொன்னவர்கள் இப்போது இறந்து விட்டார் என்கிறார்கள். எங்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருக்கிறது" என்று கதறியழுதார்.
English Summary
A Tamilian Who Injured in Kuwait Fire Accident Died