மதுரை || கொல்லாம விட மாட்டேன்.. தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்.!!
accuest kill thread to justice in madurai
கடந்த ஆண்டு மதுரை மாநகர் வில்லாபுரம் அருகே கருவேலங்காட்டுக்குள் இளைஞர்கள் சிலர் கஞ்சா கடத்துவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி அங்கு வந்த போலீசார் மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 கிலோ உலர்ந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பிரபல ரவுடியான வெள்ளை காளியின் அண்ணன் மகன் சண்முகவேல் இரவு நேரத்தில் வந்து 25 கிலோ கஞ்சாவை வைத்திருக்கும் படி கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மூன்று போரையும் போலீசார் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி 3 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும். ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். இதனால், ஆவேசமடைந்த அவர்கள் மூன்று பேரும் நீதிபதிக்கே கொலை மிரட்டல் விட்டனர்.
அதாவது, நீதிமன்றத்தின் கண்ணாடிகளை கையால் உடைத்து, ”கிளாமர் காளி வழக்கில் எதற்காக சுபாஷ் சந்திரபோஸை என்கவுண்டர் செய்தீர்கள்’ என்றதோடு, ”நாங்கள் வெள்ளை காளியின் பசங்க. வெளியே வந்ததும் நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம்” என்றுகூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர்.
உடனே அங்கிருந்த போலீசார் மூன்று பேரையும் கட்டிப்போட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
accuest kill thread to justice in madurai