முரசொலி செல்வம் அருமையான மனிதர் - நடிகர் ரஜினி உருக்கம்.! - Seithipunal
Seithipunal


முரசொலி செல்வம் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவரும், முரசொலி பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முரசொலி செல்வத்தின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ”முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர். அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajinikant condoles murasoli selvam


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->