நிச்சயம் சசிகலாவை சந்திப்பார் எடப்பாடி பழனிச்சாமி - அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுகவிடமிருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று, அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்துள்ளார். 

மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கைப்பற்றி, முதலமைச்சர் ஆனபின் சசிகலாவிடம் ஆசிவாங்க செல்வார் என்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி அளித்துள்ளார். 

மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில், சசிகலா ஒன்றும் ஐயா முத்துராமலிங்க தேவராகவோ, ஐயா மூக்கையா தேவராகவோ ஒருபோதும் மாற முடியாது. 

அதிமுக எப்போதும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கட்சி. அதிமுக இடம் இருந்து சசிகலா ஒதுங்க வேண்டும். அவர் போயஸ் தோட்ட வீட்டில் ஓய்வெடுத்தால் நல்லது. 

முன்பு பேரறிஞர் அண்ணா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பெரியார் இடம் சென்று ஆசி பெற்றது போல, வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும், தற்போது சசிகலா ஒதுங்கிக் கொண்டால் எடப்பாடி பழனிச்சாமியும் ஆட்சியை கைப்பற்றி ஆசி பெற சசிகலாவை சந்திக்க வருவார். 

சசிகலா தற்போது தொண்டர்களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். ஆனால் அவரை சந்திப்பவர்கள் யாரும் அதிமுக தொண்டர்களே இல்லை. 

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரையும், பதவியையும், அதிமுகவின் கொடியையும் பயன்படுத்த விடாமல் சசிகலா மீது வழக்கு தொடரப்படும்" என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA Rajan Sellappa say About EPS Sasikala


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->