கடலூர் தனியார் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட அரசு மிதிவண்டிகள்! லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை.!
Anti corruption police investigating private school in Cuddalore
கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 500க்கும் அதிகமான அரசு சைக்கிள் இருப்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் பள்ளியில், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்க கூடிய அரசு சைக்கிள் 500க்கும் அதிகமாக இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்துள்ளது.
புகாரின் பேரில் பள்ளியில் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஏராளமான அரசு சைக்கிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Anti corruption police investigating private school in Cuddalore