#திருவண்ணாமலை || செவிலியர் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை உயிரிழப்பு!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய மனைவி பவானி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் அவருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக பவானியை உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வரை பிரசவ வலியால் துடித்த பவானிக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலை பிறந்த ஆண் குழந்தை அடுத்த ஒரு மணி நேரத்தில் அசைவு ஏதும் இல்லாமல் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் செவிலியர்களிடம் முறையிட்ட போது அவர்கள் பரிசோதனை செய்த பிறகு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும் உறவினர்களும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோவன் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து சமாதானம் அடைந்தவர்கள் குழந்தையின் உடலை பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்து குழந்தை உயிரிழந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Baby dies after nurse gives birth in Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->