வீடு வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் - அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்கு, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அலுவலங்களில் பணிபுரியும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து மக்கள் புகார் அளித்ததும், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் தனது வீட்டு வரி பெயர் மாற்றம் செய்வதற்கு நகராட்சி பில் கலெக்டர் குணசேகசேகரனை அணுகியுள்ளார்.

அதற்கு குணசேகரன் நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர மறுத்த இது குறித்து, ராமசாமி, லஞ்சம் ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் ரசாயனம் தடவிய லஞ்சப் பணம் 25 ஆயிரம் ரூபாயை ராமசாமியிடம் கொடுத்து பில் கலெக்டரிடம் கொடுக்குமாறு கொண்டு சென்றார். 

அதன் படி குணசேகரிடம் ராமசாமி பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bill collector arrested for bribe in salem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->