மதுரை : ஹிஜாப் சர்ச்சையில் சிக்கிய பாஜக முகவருக்கு 14 நாட்கள் நீதிமன்றகாவல்..! - Seithipunal
Seithipunal


ஹிஜாப் அணிந்து வாக்களிக்க கூடாது என கூறிய பாஜக முகவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சிகள் சுயேச்சைகள் என பல முறை போட்டி நிலவியது. இந்நிலையில், நேற்று மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8வது வார்டில் வாக்குப் பதிவு செய்வதற்காக இஸ்லாமிய பெண் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது, அந்த அதில் இருந்த பாஜக முகவரி நந்தன் என்பவர் அந்தப் பெண்ணின் ஹிஜாப் கடையை அகற்றுமாறு கூறியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அருகிலிருந்தவர்கள் வீடியோவாக எடுத்த இணையதளத்தில் பதி விட்டனர்.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் கடையை அகற்றக் கோரிய விவகாரத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கிரி நந்தினி வருகின்ற 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

கர்நாடகாவில் விவகாரம் பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கும் நிலையில் வாக்களிக்க வந்த பெண்ணை ஹிஜாபை அகற்றச் சொன்ன சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP election agent jailed for 14 days for hijab controversy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->