இதெல்லாம் வெட்கக்கேடு! கும்பகர்ணன் போல் தூங்கிட்டு இருக்கீங்க - எடப்பாடி பழனிச்சாமி விளாசல்! - Seithipunal
Seithipunal


சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, தியாகம் என்ற சொல்லுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. 

ஊழல் செய்து சிறைக்கு சென்றவரை தியாகம் செய்தவர் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வது வெட்கக்கேடு. தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை.

திமுக அரசு விழித்துக் கொள்ளாமல் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. 

போதை பொருட்கள் நடமாட்டத்தை இரும்பக் கரம் கொண்டு தமிழக அரசு அடக்க நடவடிக்கை எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்து 40 மாதங்கள் ஆன போதிலும் 10% வாக்குறுதிகளை கூட இன்னும் நிறைவேற்ற வில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

குறிப்பாக கல்வி கடன், ரத்து நீர் ரத்து உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவே இல்லை. தொழில் முதலீடு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் வெள்ளை அறிக்கை கேட்டபோதிலும் இதுவரை அவர் வெளியிடவில்லை. கேட்டால் மரபு இல்லை என்கிறார்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to TNGovt DMK


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->