மூச்சு விடுவதில் சிரமம் - தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி.! - Seithipunal
Seithipunal


நெஞ்சுவலிக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை, காலை இருதயவியல் மூத்த மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை செய்த பின்னர் அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

breathing problam to senthil balaji


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->