தற்கொலை செய்த தங்கை... பழிவாங்க தங்கை கணவரை கொலை செய்த அண்ணன்..! - Seithipunal
Seithipunal


தங்கை கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், ஈச்சனேரியில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில்,  கொலை செய்யப்பட்டது காளிதாஸ் என்பது தெரியவந்தது. காளிதாஸூக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் அவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.  இதனால், வனிதாவின் அண்ணன் அவர் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவதன்று அவரை மது அருந்த அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து முத்துப்பாண்டி உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brother in law killed his sisters husband


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->