பள்ளிக்கரணை அருகே பரபரப்பு.! இறைச்சி கடை உரிமையாளர் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கரணை அருகே இறைச்சி கடை உரிமையாளர் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்சாரி. இவர் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் எதிரே உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த அன்சாரி காரின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர்.

இதில் வெடிகுண்டு வெடித்து கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் வெடிகுண்டு வீசிய மூன்று வாலிபர்கள் யார்? எதற்காக வீசினார்கள்? முன்விரோதம் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Butcher shop owner car bombed in chennai pallikaranai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->