திடீரென பழுதான கேமராக்கள் - தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அப்போது பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக வாக்கு பேட்டி உள்ள அறையில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில், தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் 95 கேமராக்கள் பழுதாக்கியுள்ளது.

திடீரென இடி, மின்னல் ஏற்பட்டதால் கேமரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்பை சரி செய்ய அறிவுறுத்தினர். அதன் படி பழுதடைந்த கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

camera repair in thenkasi vote counting center


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->