ரூ.100 கோடி நில மோசடி! திடீர் திருப்பம்! அதிமுக முக்கிய புள்ளி வீட்டில் ரெய்டு! - Seithipunal
Seithipunal


முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர், மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போலியான பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் மற்றும் எம்.பி. அலுவலகத்தில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார். 

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதால் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த முதன்மை நீதிமன்ற நீதிபதி எம்.ஆர் விஜயபாஸ்கரின் முன்னாள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஆண்டாள் கோவில் மேற்கு அம்மன் நகரில் உள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கவின் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBCID police raided MR Vijayabaskar supporter house


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->