அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர் சாய்ந்து ஒருவர் பலி..!! - Seithipunal
Seithipunal



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது. அதன்படி கடந்த ஜூன் 16ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 

இதையடுத்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதியுலா, பால் குடம் எடுத்தல், கலை நிகழ்ச்சிகள் என்று திருவிழா மிகவும் களை கட்டி இருந்தது. இந்நிலையில் நேற்று முத்து மாரியம்மனுக்கு பொங்கல் வைத்துப் படைக்கும் விழா நடந்தது. 

இதையொட்டி மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கட்கிழமையான இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. 

இந்நிலையில் தேரோட்டத்திற்காக சுமார் 15 அடி உயரமுள்ள தேரை இன்று காலை முதல் அலங்கரித்து வந்தனர். அதன் இறுதிக்கட்ட பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக தேரின் சக்கரத்தின் மேல் பகுதி சாய்ந்ததில், அதில் சிக்கி அப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதில் காயமடைந்தவர்களை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

இன்று மாலை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில், தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து அறந்தாங்கி போலீசாரும், வருவாய்த் துறையினரும்  விசாரித்து வருகின்றனர். முன்னதாக தேர் சாய்ந்ததில் இறந்தவரின் வயது 80 என்று தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chariot Overturned In Muthu Mariyamman Temple Near Aranthangi One People Killed


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->