சென்னையை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி சென்று, பிளாட் பாரத்தில் வைத்து பாலியல் தொல்லை.! 24 வயது கொடூரன் கைது.!
chennai 14 years old girl kidnap and abused
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த சிறுமி (வயது 14 ) கடந்த மாதம் 27-ம் தேதி மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோயம்பேடு காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமியை கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து வந்த ஏழுமலை (வயது 24) என்ற வாலிபர் கடத்தி சென்றது தெரிய வந்தது. ஏழுமலை தனது வீட்டாரிடம் பேசி வருவது தெரிய வந்தது. மேலும், அவரின் செல்போன் எண்ணை கொண்டு ஆய்வு செய்ததில் அவர் திருப்பதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்று காவல் துறையினர் ஏழுமலையை கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மேற்கொண்டு விசாரித்த போது, ஏழுமலை சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். அங்கு 10 நாட்களாக சாலையோரம் தங்கி இரவு நேரங்களில் சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும், விசாரணையின் போது அவர் மீது வழிப்பறி வழக்கில் தொடர்புள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து, ஏழுமலை மீது போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.மேலும், காவல்துறையினர் கைது செய்யப்பட்ட ஏழுமலையை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
English Summary
chennai 14 years old girl kidnap and abused