சென்னையில் விடிய விடிய மது குடித்த மாணவி பலி! சீரழிந்து போகிறதா இளைய சமுதாயம்?!
Chennai Drunk College Girl Death
சென்னை அருகே பாடியில், இரண்டாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவி, மது அருந்திய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, சில மாணவிகள் சேர்ந்து இரவு முழுவதும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதிகாலை, அவர்கள் அனைவரும் வீட்டு நோக்கி புறப்பட்டபோதும், ஒரே ஒரு மாணவி மட்டும் மயக்கநிலையில் இருந்து விழிக்காததை பார்த்து சந்தேகமடைந்த நண்பர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிவதற்காக, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் கல்வியாளர்களிடமும் பெற்றோர்களிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
Chennai Drunk College Girl Death