செந்தில்பாலாஜி உடல்நிலை நிலவரம் என்ன? காலையிலேயே வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


நெஞ்சுவலிக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியான நிலையில், அவரின் உடல்நிலை தற்போது தெரிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட அன்றே செந்தில்பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்கு பின் கடந்த ஒரு வருடமாக செந்தில் பாலாஜி தொழிற்சாலையில் இருந்து வருகிறார். இவரின் ஜாமின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 

மேலும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பதிவு செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று மதியம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. 

மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இசிஜி பரிசோதனையும், அதனை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai ExMinister SenthilBalaji Health


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->