சென்னையில் பரபரப்பு: உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை! தீவிர விசாரணையில் போலீசார் !  - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் மகள் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் குமரேஷ் பாபு. இவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நில அபகரிப்பு வழக்கு, அ.தி.மு.க பொது குழு வழக்கு உள்ளிட பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். 

இவர் குடும்பத்துடன் சென்னை அபிராமபுரத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் கிரா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் கிரா நேற்று மாலை அவரது வீட்டில் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கிராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court judge daughter commits suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->