8 வாரம் தான் கெடு! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Chennai HighCourt Condemn to TNGovt
சென்னையில் 2 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்த அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் 1,700 ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தகவல் தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறி, அலட்சியமாக செயல்பட்டதாக அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடவடிக்கை எடுக்காதது அதிகாரிகளின் கடமை தவறியது மட்டுமல்லாமல், அலட்சியத்தை காட்டுவதாகவும் உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
ஆக்கிரமிப்புக்களை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பை வழங்க சென்னை காவல் ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Chennai HighCourt Condemn to TNGovt