மக்களே உஷார்! சிலிண்டர் மாற்றும் விபத்து - உடல் கருகி பலியான பெண்!
Chennai LPG Cylinder Accident Woman Death
சென்னை: மடிப்பாக்கத்தில் சிலிண்டர் விபத்தில் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்த ஆசிரியை வின்சி புளோரா வீட்டில், கடந்த இரு தினங்களுக்கு முன் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது.
சிலிண்டர் காலியானதால் பக்கத்துக்கு வீட்டு மணிகண்டன் என்பவரிடம் சிலிண்டர் வாங்கி மாட்டும் போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் வின்சிக்கு உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயமும், சிலிண்டர் கொடுத்த மணிகண்டனுக்கு 45 சதவீத தீக்காயமும் ஏற்பட்டது.
இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், வின்சி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
English Summary
Chennai LPG Cylinder Accident Woman Death