2047-ல் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம்!...ஆளுநர் ஆர்.என் ரவி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்து! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை விதிகளில் பூஜை பொருட்கள் மற்றும்   மளிகைப் பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் இன்று பொதுமக்கள் காலை முதலே தங்களது வீடுகளில் வழிபாடு செய்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளபதிவில், மங்களகரமான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையில், அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்! சரஸ்வதி தேவி நம் பாதையை தம் கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் வழங்குவாள்.

இந்த ஆயுத பூஜை புதுமை மற்றும் பின்னடைவு உலகை வடிவமைக்கும் சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களைக் கொண்டு வரட்டும், மேலும் குடும்பமாக இணைந்து, 2047 ஆம் ஆண்டிற்குள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Let create a fully developed india in 2047 governor rn ravi ayudha pooja saraswati pooja wishes


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->