பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து! சென்னையை சூழ்ந்த கரும்புகை... பரபரப்பில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னை, மணலி புதுநகர் அருகே செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக ஊழியர்கள் குடோனில் இருந்த பெயிண்ட் பேரல்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai paint godown fire accident


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->