அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் ஒருவர் உயிரிழப்பு! பொதுமக்கள் பீதி!
Chennai person died due to corona
சென்னை, ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
கடந்த 31ஆம் தேதி சம்பந்தப்பட்ட நபர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தோற்று பாதித்த நபருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக சென்னையில் ஒருவர் உயிருள்ள உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Chennai person died due to corona