சென்னை : பாலியல் தொல்லை கொடுத்தவனை, அடித்தே கொலை செய்து புதைத்த பள்ளி மாணவிகள்.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே காதல் என்ற போர்வையில் கல்லூரி மாணவன் ஒருவன், 15 வயது பள்ளி மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி காசு பறிக்கவே, அந்த கல்லூரி மாணவனை, பள்ளி மாணவிகள் ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னையை அடுத்த மண்ணிவாக்கம் கருமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் பிரேம்குமார். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நண்பருடன் செங்குன்றம் சென்ற போது, அங்கிருந்த சிலர் பிரேம்குமாரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இதில், பிரேம்குமார் நண்பர் விக்கி தப்பி ஓடியுள்ளார். 

பிரேம்குமார் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் விக்கியை விசாரிக்கவே, நடந்த நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கும்மிடிப்பூண்டி ஈச்சங்காடு ஏரிக்கரையில் ரத்தக்கரை படிந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார், அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது பிரேம்குமார் அங்கு வெட்டு காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் போலீசாரின் விசாரணையில்,  பிரேம்குமார் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 15 வயது பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த பள்ளி மாணவியின் தோழிகளுடன் புகைப்படம் எடுத்து, அதனை ஆபாசமாக சித்தரித்து அந்த மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை மற்றும் பண கேட்டு மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி மாணவிகள் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான செங்குன்றத்தை சேர்ந்த அசோக் குமார் என்ற ஆண் நண்பரிடம் உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து பிரேம் குமாரை கொலை செய்து விடலாம் என்று முடிவு செய்து உள்ளனர்.

அதன்படி, சம்பவம் நடந்த கடந்த 17ஆம் தேதி, 15 வயது பள்ளி மாணவியும், அவரின் ஒரு தோழியும் பிரேம்குமார் செங்குன்றத்துக்கு வரவழைத்துள்ளனர். அப்போது அசோக்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து பிரேம்குமார் தாக்கியுள்ளனர். பின்னர் ஈச்சங்காடு ஏரிக்கு பிரேம்குமார் அழைத்துச் சென்று அடித்து கொலை செய்து, அங்கயே புதைத்து தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து 2 பள்ளி மாணவிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CHENNAI SCHOOL GIRL MURDER PLAN


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->