பெரும் சோகம்! பெற்றோர்களே கவனம்! வேன் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலி! - Seithipunal
Seithipunal


நாமக்கல் அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அருகில் உள்ள மில்லில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அபிநயா.. இவர்களுக்கு விசாகன் மற்றும் வெற்றிவேல் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

நான்கு வயதாகும் மூத்த மகன் விசாகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருவதாக கூறப்படுகிறது. தினமும் பள்ளிக்கு வேனில் சென்று வருகிறான். நேற்று காலை வழக்கம் போல் மணிகண்டன் வீட்டு முன் பள்ளி வேன் நின்று கொண்டிருந்தது. அபிநயா தனது மகன் விசாகனை  அழைத்து சென்று பள்ளி வேனில்  ஏற்றிவிட்டு திரும்பி உள்ளார்.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயதாகும் வெற்றிவேல் திடீரென சாலையில் இருந்த  வேனின் அடிப்பகுதியில் புகுந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வேனின் அடிப்பகுதியில் குழந்தை இருப்பதை கவனிக்காமல் ஓட்டுநர் வேனை இயக்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை வெற்றிவேல் மீது வேன் சக்கரம் எறியதில் சம்பவம் இடத்திலே வெற்றிவேல்  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக காவல்துறை பெற்றோர்கள் மற்றும் க்கம் பக்கத்தினர், பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child died after getting caught in the wheel of a school van near Namakkal


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->