சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரண வழக்கு! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு! - Seithipunal
Seithipunal


கடந்த 2020 ஆம் ஆண்டு, திருவள்ளுவர் அடுத்த நாசரத்பேட்டை தனியார் ஹோட்டல் ஒன்றில், சின்னத்திரை நடிகை சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அவர் கணவர் தெரிவித்த நிலையில்,  சித்ராவின் தந்தை அளித்த புகாரின் பேரில், கணவர் ஹேமாத் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரியும், வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிட கோரி, நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அவரின் அந்த மனுவில், வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்தில் ஹேம்நாத் வேண்டுமென்றே பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

நடிகை சித்ராவின் தந்தை தொடர்ந்த இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chitra mystery death case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->