தொடர் அமளியில் அ.தி.மு.க... இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு - முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்.! - Seithipunal
Seithipunal


சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியிருந்தார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதில் அளிக்க அரசு தயாராக உள்ளது. 

இதனை சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளில் இருந்து தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதனை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். 

ஆனால் மக்கள் பிரச்சனையை பற்றி இந்த பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாக தெரிவித்தும் அதனை ஏற்க மனம் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது பேரவையின் உடைய மாண்புக்கும் மரபுக்கும் ஏற்புடையது அல்ல. 

பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அ.தி.மு.க மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயக கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் செய்வதில் முனைப்பாக உள்ளது. 

ஆனால் இந்த துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இருக்கிறது. இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin says ADMK bent seeking vain publicity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->