தவறி விழுந்த செல்போன்.. எடுக்க சென்ற கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


ரயிலுக்கு அடியில் விழுந்த செல்போனை எடுக்க சென்ற இளைஞர் ரயில் மோதி பலியான சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புலவனூரை சேர்ந்த பாரதிராஜா. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத்தில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். விழுப்புரம் ரயிலில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பரங்கிபேட்டை ரயில் நிலையத்தில் அவரது செல்போன் தவறி விழுந்தது.

அதனை எடுக்க ரயிலுக்கு அடியில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் புறப்பட்டதில் அவர் ரயில் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College Student Dead


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->