அரியலூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து - கல்லூரி மாணவர் பலி, 30 பேர் காயம்
College student killed and 30 injured in bus overturns in Ariyalur
அரியலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து பயணிகளுடன் திருச்சி மாவட்டம் துறையூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ராயபுரம் பகுதி அருகே சென்ற போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
College student killed and 30 injured in bus overturns in Ariyalur