டேங்கர் லாரி மீது மோதிய காய்கறி லாரி - திடீரென வெளியான கார்பன் டை ஆக்ஸைடு.!!
corbon dioxide released form road for lorry accident
டேங்கர் லாரி மீது மோதிய காய்கறி லாரி - திடீரென வெளியான கார்பன் டை ஆக்ஸைடு.!!
கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து, கோவையில் உள்ள சோடா தயாரிக்கும் நிறுவனத்திற்கு டேங்கர் லாரி மூலம் கார்பன் டை ஆக்சைடு வாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து இந்த லாரி தமிழக - கேரள எல்லையான வாளையாறு வட்டப்பாரா அருகே வந்தபோது, கோயம்புத்தூருக்கு காய்கறி லோடு ஏற்ற வந்த மற்றொரு லாரி, டேங்கர் லாரியில் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டேங்கர் லாரியின் வால்வில் உடைப்பு ஏற்பட்டு, கார்பன்டை ஆக்சைடு பயங்கர சத்தத்துடன் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த போலீசார் உடனடியாக பாலக்காடு - கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதை தடுக்க முயன்றனர்.
சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் டேங்கர் லாரியில் உடைப்பு ஏற்பட்ட வால்வை சீர் செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
corbon dioxide released form road for lorry accident