பரபரப்பு வீடியோ! வீடு வீடாய் பாக்கெட்டில் டோர் டெலிவரி செய்யப்படும் கள்ளச்சாராயம்!! - Seithipunal
Seithipunal


சேலம் : இரு சக்கர வாகனத்தில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதும் அதை அவர்கள் வாங்கி சொல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை விசாரிக்க சிபிசிஐடி. விழுப்புரம் மாவட்ட ஏடிஎஸ்பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அதிகம் கலக்கப்பட்டதால் குடித்தவர்களில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், சேலத்தில் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மாலை நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வந்து கள்ளசாராயத்தை விற்பனை செய்வதும், போன் செய்தால் வீட்டுக்கே வந்து டோர்டெலிவரி செய்வதும் போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Counterfeit liquor delivered door todoor in pocket


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->