நள்ளிரவில் காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு - சென்னையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள டி.பி.சத்திரம் 27-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இஸ்ரவேல். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, இஸ்ரவேல் ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரவேல் அவரது காதலியுடன் கடந்த சனிக்கிழமை இரவு பெரியமேடு பகுதியில் ஒன்றாக கைகோர்த்தபடி நடந்து வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அப்பாஸ் என்பவர் இஸ்ரவேலை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதுடன் அவருடைய காதலியிடம் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர்களை தடுத்து விலக்கி விட்டுள்ளனர்.

ஆனால், அப்பாஸ் அவர்களை தீர்த்துக்கட்டாமல் விட மாட்டேன் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால் இஸ்ரவேல் மிகவும் எச்சரிக்கையுடன் தனது காதலியோடு டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கி உள்ளார்.

அவர்களை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு அப்பாஸ் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இஸ்ரவேலுக்கும், அவரது காதலிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்ததால் அப்பாசும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

இதையடுத்து இஸ்ரவேலும், அவரது காதலியும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்பாசும், அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples injured for gang attack in chennai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->