#கடலூர் || கல்லூரி மாணவி தற்கொலை பின்னணியில் நாடக காதலனின் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், தெற்கு பிரச்சாரத்தில், குளிப்பதை வீடியோ எடுத்து இளைஞர் ஒருவர் மிரட்டியதால், கல்லூரி மாணிவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்து கொண்ட அந்த இளம்பெண், தற்கொலைக்கு முன்னதாக எழுதிய கடிதத்தை தற்போது போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

21 வயது கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், நைனார் குப்பத்தை இளைஞர் லோகநாதனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட லோகநாதன் இடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் படி, கல்லூரி மாணவியும், லோகநாதனும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, மாணவிக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனால், லோகநாதனிடம் பேசுவதை கல்லூரி மாணவி தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன் மாணவியின் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டியது தெரியவந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cudallore south pichavaram college girl suicide case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->