கடலூர்: 3 பேர் கொலை வழக்கில் திருப்பம் - அதிரவைக்கும் பின்னணி! 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வெளியான முதல்கட்ட தகவலின் படி, இன்று காலை அந்த வீட்டிலிருந்து புகை வந்ததாகவும், துர்நாற்றம் வீசியதாகவும் அக்கம் பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த மூன்று அறைகளில் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு உடல் என எரிக்கப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ந்து போய் உள்ளனர்.

மேலும் வீடு முழுவதும் ஆங்காங்கே ரத்தம் சிதறி கிடந்திருப்பதை கண்ட போலீசார், இது நிச்சயமாக படுகொலை தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் விசாரணையில் கடந்த 13ம் தேதியே இந்த மூவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும், கொல்லப்பட்ட பின்னர்  3 பேர் உடல்கள் எரிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில், 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore burnt to death family murder


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->