ஒரே‌ ஒரு‌ ட்விட்டர் வீடியோ.. முன்னாள் அதிகாரியை‌ தட்டி தூக்கிய சைபர் க்ரைம்.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாக ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியை சைபர் கிரைம் போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

ஸ்ரீனிவாச சுப்பிரமணியன் என்பவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "எந்த தெய்வம் குடியிருந்த கோவிலோ 😢 இடம் தென்காசி" என பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தொடர்புடைய வீடியோவை பதிவிட்டுள்ளார். 

அசன் மைதீன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்காசி சைபர் கிரைம் போலீசார் சென்னையைச் ஸ்ரீனிவாச சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கு காரணம் உத்திரபிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது. மறைமுகமாக அந்த நிகழ்வை உணர்த்தும்படி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyber crime arrested for masque video in Twitter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->