தினமும் ரயில் தாமதம் : ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்ட பயணிகள்!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டில் தொடங்கி சென்னை கடற்கரை வரை செல்லும் மின் தொடர் வண்டி நாள்தோறும் காலதாமதமாக வருவதால் ரயில் பயணிகள் கூடுவாஞ்சேரி ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தமிழ்நாட்டில் நாள்தோறும் ரயிலில் பயணிக்கும் பயணிகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து மின் தொடர் வண்டி தினம் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கும், செங்கல்பட்டு சந்திப்பிலிருந்து சென்னை கடற்கரைக்கும் நாள்தோறும் மின்சாரரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் வரும் மின்சார ரயில் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் கால தாமதமாக வருவதாக பயணிகள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.

மின் தொடர் வண்டி ஒரு மணி நேர கால தாமதமாக வருவதாக புகார் அளித்தும், எந்தப் பயனும் இல்லாததால் ரயில் பயணிகள் கூடுவாஞ்சேரி நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சரியான நேரத்திற்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலக அதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daily train late passenger upset


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->