தர்மபுரி | இருதயத்தில் ஓட்டை, மருத்துவ செலவு, தாயின் கஷ்டம்! உயிரை மாய்த்த 12ம் வகுப்பு மாணவி! - Seithipunal
Seithipunal


மாரண்ட அள்ளி அருகே தாய் சம்பாதிக்கும் பணம் தனது மருத்துவ செலவிற்கே வீணாவதை எண்ணி வருந்தி பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது:

தருமபுரி: மாரண்ட அள்ளி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் தமிழ்செல்வி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருைடய தந்தை இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால், தாய் சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் நடத்தினர். இந்நிலையில் தமிழ்செல்விக்கு இருதயத்தில் ஓட்டை இருந்ததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்து வந்தனர். 

இவருடைய தாய் சம்பாதிக்கும் பணம் மருத்துவ செலவிற்க்கே சரியாக உள்ளதாக நினைத்து தமிழ்செல்வி மன வேதனையில் இருந்ததால் தமிழ்செல்வி வீட்டில் இருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அதனை பார்த்த அவரது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் தமிழ்செல்வியை மீட்டு மாரண்ட அள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதால் செல்லும் வழியிலேயே தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dharmapuri 12 student commits suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->