பா.ரஞ்சித் யாரு? எனக்கு அவரை தெரியாதே... திமுக அமைச்சர் சேகர்பாபு சர்ச்சை பேட்டி! - Seithipunal
Seithipunal


கடந்த ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வழக்கில், தற்போது வரை பதினாறுக்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

போலீசாரின் விசாரணையில் இந்த வழக்கு பல்வேறு கோணங்களில் நீண்டு கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. 

கட்டப்பஞ்சாயத்து, முன்விரோதம், தொழில் போட்டி என பல்வேறு கோணங்களில் இந்த கொலை வழக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பாக நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

மேலும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற பா ரஞ்சித், மறைமுகமாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் பதிலடி கொடுத்திருந்தார். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் சேகர்பாபுவிடம், பா ரஞ்சித்தின் திமுக மீதான விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு, பா ரஞ்சித் யார் என்றே தெரியவில்லை. எனக்கு அவர் யார் என்று தெரியாது. ஒருவேளை அவர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும் என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.

ஆர்யா, கார்த்தி, ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கியவரை, திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்தவரை, யார் என்றே தெரியாது என்று அமைச்சர் பேசி இருப்பது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Sekar Babu Say About Pa Ranjith


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->