லால்குடி திமுக எம்எல்ஏ இறந்துவிட்டாரா? தொகுதி காலி! வெடித்தது திமுக உட்கட்சி பூசல்!
DMK Trichy Lalkudi MLA vs KN Nehru
திமுக அமைச்சர் கேஎன் நேரு நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி பகுதியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்காக அமைப்பதற்கான இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார், அரசு அலுவலர்கள், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவில், லால்குடி திமுக எம்எல்ஏ இயற்கை எய்துவிட்டபடியால் லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது என்று, லால்குடி திமுக எம்எல்ஏ சௌந்திரபாண்டியன் கமெண்ட் செய்து பரபரப்பை உண்டாக்கினார்.
இதுகுறித்து திமுகவினர் வட்டாரத்தில் சொல்லப்படுவது என்னவெனில், லால்குடி தொகுதியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு திமுக அமைச்சர் வரும்போது, அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை அழைக்க வேண்டும் என்பது நடைமுறை.
ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், எதிர் கட்சி எம்எல்ஏவை கூட தேடி தேடி அழைப்பவர்கள் சொந்த கட்சி எம்எல்ஏவை அழைக்கவில்லை என்றும், திமுக மாவட்ட தரப்பிலும், அமைச்சராலும் தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்பட்டு வருவதாகும் சொல்கின்றனர்.
இந்த விவகாரம் மேலும் பூதாகாரம் ஆவதற்கு முன்னாள் அவரை அழைத்து சமாதானம் செய்து, அவருக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு அதே பதிவில் திமுகவினர் சிலர் கோரிக்கை வைத்து கமெண்ட் செய்துள்ளனர்.
English Summary
DMK Trichy Lalkudi MLA vs KN Nehru