சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த கொடூரன், போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை சேர்ந்தவர் பால்ராஜ். லாரி டிரைவரான இவர் அருகில் வசிக்கும் குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த வீட்டில் வசித்து வரும் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம்  நட்பாக பழகி வந்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரம் வீட்டிற்கு வந்த பால்ராஜ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருந்தார்.

அந்த வீடியோவை காட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். வழக்கம் போல அந்த சிறுமியை மிரட்டியதை கண்ட  அவரது தாய் இதுகுறித்து மகளிடம் கேட்டுள்ளார். அப்போது தனக்கு நடந்த கொடுமையை பற்றி தாயிடம் கூறியுள்ளார்.  இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறயினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Driver arrested in POCSO


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->