குளியலறையில் தீ குளித்த மருந்து கடைக்காரர்! மனைவி போலீசில் புகார்!  - Seithipunal
Seithipunal


ஈரோடு, சென்னிமலை அருகே உள்ள களிச்சாங்காட்டுவலசை  பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 41) இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக குமராபுரியில் மருந்துகளை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். 

மேலும் சென்னிமலை அருகே தற்போது புதியதாக மற்றொரு மருந்து கடை திறந்து கடந்த 6 மாதங்களாக நடத்தி வந்தார். மருந்து கடையில் போதிய வருமானம் இல்லாததால் செந்தில் யாரிடமும் சரியாக பேசாமல் மனம் உடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் நேற்று மருந்து கடைக்கு செல்லாமல் செந்தில் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது செந்தில் குளியலறைக்குச் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக செந்திலை மீட்டு அவசர ஊர்தி மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் செந்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக செந்திலின் மனைவி சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drug dealer commits suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->