தமிழகத்தில் நில அதிர்வா? எந்த மாவட்டத்தில்? - Seithipunal
Seithipunal


நெல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் அச்சமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 6 மணி அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதேபோன்று, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், நில அதிர்வு ஏற்பட்டதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.

மேலும் அவர், தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் நில அதிர்வு உணரப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், கூடன்குளம் அணுமின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earth quake in tirunelveli


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->