தமிழக அரசின் அரசாணை தவறான முன்னுதாரம் - நேற்று அண்ணாமலை, இன்று எடப்பாடி பழனிச்சாமி - கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக கடந்த 2021 முதல் பணியாற்றி வந்த ஹசன் முகமது ஜின்னா தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டு உள்ளதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுவாக முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்படி தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட Asst. Prosecutor-ஆக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பதவி உயர்வின் மூலம் Director of Prosecution ஆக நியமிக்கப்படுவது மரபு.

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களைக் கடுமையாக எதிர்ப்பதாக ஒருபுறம் கூறிவிட்டு, மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டப்பிரிவு 20(2)(a) Bharatiya Nagarik Suraksha Sanhita 2023ன் படி,ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவை, குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் (பொறுப்பு)-ஆக (Director of Prosecution Incharge) நியமித்திருப்பது விந்தையானது. அரசு துறையின் தலைவராக அரசியல் சார்புள்ள ஒருவரை இந்த விடியா திமுக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது தவறான முன்னுதாரம் என்று எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருபுறம் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை எதிர்ப்பதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், உண்ணாவிரதம் இருப்பதும், மறுபுறம் தனக்குச் சாதகமான உட்பிரிவை பயன்படுத்திக்கொள்வதுமாக திமுக, தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றியுள்ளது. 

ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இந்த இயக்குநரகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர்களுடைய நியாயமான பணி உயர்வு இதனால் பாதிப்படைந்துள்ளது. எனவே, அரசியல் சார்புள்ள வழக்கறிஞர் ஒருவரை குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் பதவிக்கு நியமிக்கக்கூடாது என்றும், வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா அவர்களை அப்பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதில், "மாநிலத்தின் ஒட்டு மொத்த குற்ற வழக்குகளைக் கையாளும் முக்கியப் பொறுப்பில், மூன்று ஆண்டுகள் முன்பு வரை திமுக இளைஞரணித் துணைச் செயலாளராக இருந்த ஒருவரை நியமித்திருப்பது, திமுகவின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. 

முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami Condemn to Director Crime Branch post DMK 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->