ஈரோடு அருகே வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை! - Seithipunal
Seithipunal


ஈரோடு: பெருந்துறை ஆர்.எஸ். ரோடு, வி.ஐ.பி. நகரைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 51). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் சக்தி வேல் (வயது 31). 

சக்திவேல் ஈரோட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் பீஸ் செக்கிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 31 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருப்பதால் மனமுடைந்து பேரும் சோகத்தில் இருந்துள்ளார்.  

இன்று அதிகாலை சக்திவேல் வேலைக்கு செல்லவில்லை. அதனை கேட்ட தாயிடம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறியுள்ளார். 

பின்னர் அவரது அறைக்கு சென்று விஷம் குடித்து அலறியுள்ளார். தாய் ரஞ்சிதம் சக்திவேல் அறைக்கு சென்று பார்த்த போது அவர் வாயில் நுரை தள்ளி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  

உடனடியாக சக்திவேலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை அளிக்க பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது குறித்து பெருந்துறை காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode near teenager commits suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->