எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் மரணம்!
ezra sargunam Death
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
திமுகவின் தீவிர ஆதரவாளரான இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார்.
மேலும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.
குறிப்பாக தேர்தல் நேரத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தூதுவராக செயல்பட்டு உள்ளார். அதிலும், 2016 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.
இது அனைத்திற்கு மேல் இந்து மத கடவுள் நம்பிக்கைகளை நேரடியாக விமர்சித்து பல சர்ச்சைகளுக்கு ஆளாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.